இந்தியாவில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல், இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.
இன்னும் 4 நாட்கள்:
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளது. அதன் பிறகு, வருகிற அக்டோபர் 1ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
- 11 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பயனர்களும் பயன்பெறும் அடல் பென்ஷன் யோஜனா, என்ற மத்திய அரசின் திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர், அக்.1 முதல் இத்திட்டத்தில் சேர முடியாது.
- விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வரும், சமையல் எரிவாயுவின் சர்வதேச சந்தை தேவை குறைய வாய்ப்பு உள்ளதால், சிலிண்டர் விலை குறைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
- கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அக்.1 முதல் சேமிக்க முடியாது. ஏனெனில், டோக்கனைஷேசன் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதால், இனி ஆன்லைன் மோசடி, வங்கி தரவுகள் திருட்டு போன்றவை நடப்பது தடுக்கப்படும்.
- பங்குச் சந்தை முதலீட்டில், Two-factor authentication என்பதை செப்.30 க்குள் முடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், முதலீட்டாளர்கள் புதிதாக வணிகம் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
- மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், அக்.1 முதல் நாமினி விவரங்களை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.