இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே சீருடை வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு :
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு, தினமும் பள்ளிக்கு வரும் போது சீருடையிலே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இந்த நடைமுறை இருந்து வருகிறது. மாணவர்களிடையே எந்த ஏற்றத் தாழ்வும் இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த சீருடை விதிமுறையை அரசு செயல்படுத்தி உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்க உத்தரவிட வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுகுறித்து விசாரித்த நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் குறித்து உத்தரவிடும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், மேலும் இதில் விசாரிக்க ஒன்றுமே இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது பலருடைய பேசு பொருளாக மாறியுள்ளது.