இந்தியாவில் ஒரே நாளில் 1.41 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!

0

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கி விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒரு நாள் பாதிப்பு :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், அமலுக்கு வந்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் 1.41 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இவ்வளவு அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே நாளில் 285 நபர்கள் இறந்துள்ளதாகவும், 40,895 நபர்கள் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here