பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற தளபதி விஜய் – போட்டோவுடன் வெளியான முக்கிய செய்தி!!

0
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற தளபதி விஜய் - போட்டோவுடன் வெளியான முக்கிய செய்தி!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று, நடிகர் விஜய் தன் வீட்டின் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

ஏற்றுக்கொண்ட விஜய்:

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற திங்கள்கிழமை, பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், அசாத் அம்ரித் மஹோத்சவ் என்ற சிறப்பு கொண்டாட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி சிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை ஏற்று அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்று வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில், பிரதமரின் அழைப்பை ஏற்று தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்துள்ளார். அதேபோல் பனையூரில் அமைந்துள்ள நடிகர் விஜய்யின், மக்கள் இயக்கம் அமைந்துள்ள அலுவலகத்திலும் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. தற்போது விஜய் வீட்டில் தேசிய கொடி இருக்கும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here