இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் தனித்துவமான பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் குசல் மெண்டிஸின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
குல்தீப் யாதவ்:
இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களான வீராஹண்டிகே மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்களில் முகமது சிராஜின் அதிவேக பந்து வீச்சால், வீராஹண்டிகே 20 ரன்களிலேயே போல்டானார். இவரை தொடர்ந்து, சுப்மன் கில்லால் நுவனிது பெர்னாண்டோ (50) ரன் அவுட்டானார். இதையடுத்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸை குல்தீப் யாதவ் எல்பிடபிள்யூ ஆக்கினார்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்களில் ஒரே இந்தியர் மட்டுமே!!
இதன் மூலம், சர்வதேச ஒருநாள் அரங்கில் குல்தீப் யாதவ் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவர் இந்த போட்டியில், சரித் அசலங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷனக போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டையும் தனது தனித்துவமான பந்துவீச்சால் கைப்பற்றி அசத்தி உள்ளார்.