இந்திய அணி நாளை இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்த ஆண்டின் முதல் டி20 போட்டியை விளையாட உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
IND vs SL:
இந்திய அணி நாளை இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணியில், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் இந்திய படை நாளை களமிறங்க உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடருக்கான இந்திய அணியை ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார். நாளை நடைபெற இருக்கும் போட்டிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியில், டி20 உலக கோப்பையை தவறவிட்டாலும், எதிர்வரும் 50 உலக கோப்பையை வெல்வதே 2023 ம் ஆண்டின் முதல் தீர்மானமாகும் என்று கூறியுள்ளார்.
ஹாக்கி உலக கோப்பை 2023: சொந்த மண்ணில் வெற்றியுடன் துவங்க காத்திருக்கும் இந்தியா!!
மேலும், ரிஷப் பண்ட் குறித்து, அவர் அணியில் இல்லாதது பெரும் இழப்பு தான். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நாளைய போட்டியில், இஷான் கிஷனுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்கம் தர அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.