துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் முதல் மோதலில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்கள் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
IND VS PAK 2022!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டி எப்போதுமே சண்டையாகவே மாறுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு தோல்வியை பரிசளிக்குமா என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதே நேரத்தில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சந்தித்து அசுர பலத்தில் உள்ளனர். இதனால் இந்த அணி எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பலாகவே விளையாடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி பந்து வீச்சாளர்களான புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா இருவருமே சிறந்த பந்துவீச்சின் மூலம் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். இதனால் இந்த இரு பந்துவீச்சாளர்களை சமாளிப்பது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
மேலும் இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக அளவு கை கொடுப்பதால் இந்திய பந்துவீச்சாளர்கள் பல மாயாஜால வேலைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று தெரியவில்லை. மேலும் இன்று போட்டியின் போது மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே வானிலையும் போட்டிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இதனால் ஆட்டம் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் என்று தான் தெரிகிறது.