நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
டி20 உலக கோப்பைக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியாவின், இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரிஷப் பந்த் 6 ரன்களில் வெளியேற, இஷான் கிஷனுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ், 360 டிகிரி நாயகன் என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் அதிரடி காட்டினார். இவர், எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டு டி20 போட்டியில், 49 பந்துகளில் தனது 2 வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில், இவர் 51 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 111* ரன்கள் அடித்து அசத்தினார்.
டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பந்த்…, பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??
இவர் இதற்கு முன் கடந்த ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 55 பந்துகளில் 117 அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஒரே ஆண்டில், டி20 போட்டிகளில் 2 சதங்களை அடித்து ரோஹித் சர்மா சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார். கடந்த 2018ம் ஆண்டு, ரோஹித் சர்மா இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 போட்டியில் சதங்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.