இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 மற்றும் ஒருநாள் தொடர்களை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியுடன் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (18.01.2023) நடைபெற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து இலங்கை அணியுடன் நடந்த தொடர்களில் விளையாடிய இந்திய வீரர்கள் மாற்றம் செய்யாமல் மீண்டும் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளனர். இதனால் இரு அணி வீரர்களும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் தொடரும் சோகம்., ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்.., மக்கள் அதிர்ச்சி!!
இந்நிலையில் இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடர்களில் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக IPL போட்டிகளில் பெங்களூரு அணிக்காக அசத்திய ரஜத் படிதார் முதல் முறையாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளார்.