IND vs NZ: அரைசதம் அடித்து வெளியேறிய இந்திய தொடக்க வீரர்கள்…, வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்??

0
IND vs NZ: அரைசதம் அடித்து வெளியேறிய இந்திய தொடக்க வீரர்கள்..., வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்??
IND vs NZ: அரைசதம் அடித்து வெளியேறிய இந்திய தொடக்க வீரர்கள்..., வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்??

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் மற்றும் சுப்மன் கில் அரைசதம் அடித்து வெளியேறி உள்ளனர்.

IND vs NZ:

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை ஈடன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியாவின், தொடக்க வீரர்களான, கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்கள், ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில், சுப்மன் கில் அரைசதம் அடித்த கையோடு, லாக்கி பெர்குசன் பந்தில் டெவோன் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து, பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து, தவானும் 72 ரன்களில், வேகப்புயல் டிம் சவுத்தி பந்தில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 24.3 ஓவரில் 124 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

FIFA உலக கோப்பை தொடர் : வெற்றியுடன் தொடங்கிய போர்ச்சுகல்…, ரொனால்டோ படைத்த புதிய சாதனை!!

இதையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 4, ரிஷப் பந்த் 15 உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வெளியேறினர். தற்போது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி வருகின்றன. இந்திய அணியில் முன் வரிசை வீரர்கள் வேகமாக வெளியேறியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2வது பாதியில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here