இந்திய அணி டி20 உலக கோப்பையை முடித்த கையோடு நியூஜிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு, இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட, டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் போட்டியானது மழை காரணமாக கை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, 2வது டி20 போட்டியில், சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்தாலும், தீபக் ஹூடாவின் பந்துவீச்சாலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி போட்டியானது, நாளை நடைபெற இருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் போட்டியில், ஒரு வேளை மழை பொய்த்தால் போட்டிகைவிடப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை இது போன்று நடந்தால் இந்திய அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வராமல் இருந்தாலும், இந்திய அணி தரமான பிளேயிங் லெவனை களமிறங்கி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.
அடக்கொடுமையே.., திரும்பவும் சிக்கலில் மாட்டிய நடிகர் சிம்பு.., வருத்தத்தில் ரசிகர்கள்!!
எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.