IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கடைசி யுத்தம்…, பிளேயிங் லெவனில் இந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கடைசி யுத்தம்..., பிளேயிங் லெவனில் இந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கடைசி யுத்தம்..., பிளேயிங் லெவனில் இந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான 3 வது டி20 போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ:

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டி ரத்தனத்தை அடுத்து, 2வது போட்டியில் இந்தியா வென்றது. இதனால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, நாளை 3வது டி20 போட்டி நாளை மெக்லீன் பார்க்கில் நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்திய அணி வென்று விட்டால் தொடரை கைப்பற்றி விடும். ஒருவேளை தோல்வியடைந்தால், தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடியும். இதனால், இந்திய அணி பெரும்பாலும், தொடரை முழுவதுமாக கைப்பற்ற முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் 3 வது போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

இந்திய அணியை எச்சரித்த நியூசிலாந்து வீரர்…, அப்படி என்ன தப்பு செஞ்சாங்க??

குறிப்பாக, டி20 போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப் பந்துக்கு பதில், சஞ்சு சாம்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங்குக்கு பதில், உம்ரன் மாலிக் என மாற்றம் செய்யப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது டி20 போட்டியில், சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் இருவரும் களமிறங்காததை அடுத்து, இவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில், பிசிசிஐக்கு எதிராக பல கேள்விகள் எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here