நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணி வென்று தொடரை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs NZ:
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து, 2 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், நியூசிலாந்து அணி 1-0 என்ற வெற்றி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, நாளை நடைபெற இருக்கும் கடைசி போட்டியில், நியூசிலாந்து அணி வென்றால் தொடரை கைப்பற்றி விடும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், தவான் தலைமையிலான இந்திய அணி ஒரு சில போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும், தொடரை இழந்தது இல்லை. இதனால், நாளைய போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது போட்டியில், சஞ்சு சாம்சனுக்கு விளையாடும் லெவனில் இடம் இல்லாமல் இருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருந்தனர். இதன் விளைவால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“விக்ரம் வேதா” படத்தில் நாங்க நினைத்தது வேற .., நடந்தது வேற.., உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்!!
இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்: ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா / சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.