IND vs NZ 2nd T20: கடைசி ஓவரில் இந்தியா வெற்றி…, ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா!!

0
IND vs NZ 2nd T20: கடைசி ஓவரில் இந்தியா வெற்றி..., ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா!!
IND vs NZ 2nd T20: கடைசி ஓவரில் இந்தியா வெற்றி..., ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியை இந்திய அணி போராடி வெற்றி பெற்றது குறித்து ஹர்திக் பாண்டியா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

IND vs NZ:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து இருந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் விளைவாக, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு போராடி 19.5 ஓவரில் தான் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், 100 ரன்கள் அடிப்பதற்கு கடைசி ஓவர் வரை சென்றது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

சொந்த மண்ணில் வெற்றி கண்ட கேரளா…, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அபாரம்!!

இது குறித்து, இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, போட்டியில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால், கடைசி ஓவர் வரை சென்றது, பெரும் ஏமாற்றம் என்று கூறியுள்ளார். மேலும், போட்டி நடைபெற்ற மைதானமானது டி20க்கானதே கிடையாது. பிட்சுகளை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னேற தயார் செய்து வைக்க வேண்டும். கடைசி நேரத்தில் தயார் செய்ததால், பிட்ச் கொஞ்சம் கூட சரி வராது என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here