இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை, இந்திய அணி வென்ற நிலையில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2வது ஒருநாள் போட்டி, ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நாளை நடைபெற இருக்கும் 2வது போட்டியை இந்திய அணி வென்றால், தொடரை கைப்பற்றி விடும். ஆனால், இந்தியா வந்துள்ள, நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை முழுவதுமாக இழந்த நிலையில், ஒருநாள் தொடரையாவது வெல்ல முயற்சிக்கும். இதன் விளைவாக, இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
IPL 2023 ல் ரிஷப் பண்ட் வருவாரா?? மாட்டாரா?? பதில் அளித்த ரிக்கி பாண்டிங்!!
இந்த போட்டி நடைபெறும் மைதானமானது, முதலில் பேட்டிங்க்கும், அதன் பின் வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக உள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி, பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2வது போட்டி, தொடரை கைப்பற்றுவதற்கான முக்கிய போட்டி என்பதால் தரமான பிளேயிங் லெவனை இந்திய அணி களமிறங்க கூடும்.
நியூசிலாந்துக்கு எதிராக எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் பிளேயிங் XI:
ரோஹித் சர்மா (சி) , சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.