நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது.
IND vs NZ:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இந்தியாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்களில் ஃபின் ஆலன் 35 ரன்களில் வெளியேற, மார்க் சாப்மேன் டாக் அவுட்டானார். இவர்களை தொடர்ந்து, க்ளென் பிலிப்ஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்ப மறுபுறம் அதிரடி கட்டிய டெவோன் கான்வே அரைசதம் (52) அடித்து அசத்தினார். இதனால், 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து – இந்தியா T 20 போட்டி…, ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த எம்.எஸ்.தோனி..,
சற்று கடினமான இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில் (7), இஷான் கிஷன் (4), ராகுல் திரிபாதி (0) என அடுத்தடுத்து வெளியேற, சூர்யகுமார் (47), ஹர்திக் பாண்டியா (21), வாஷிங்டன் சுந்தர் (50) ஓரளவு நிலைத்து நின்றனர். ஆனாலும், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. தனது சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணி, நேற்று நியூசிலாந்து எதிராக தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.