“இதுலயும் சிறப்பாக செயல்பட்டால் தான் நாம் வெற்றி பெற்றதா அர்த்தம்”…, நியூசிலாந்து போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!!

0

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

IND vs NZ:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை எடுத்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ஆட்டத்தின் இறுதி வரை நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதத்தை (208) அடித்து, அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்கு வகித்தார். 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 337 ரன்களில் சுருண்டதால், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பாக, முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

3 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த ஜாம்ஷெட்பூர்…, சூப்பர் லீக்கில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி!!

இந்த போட்டி குறித்து ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் (140) சிறப்பாக பேட்டிங் செய்தார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பந்து வீச்சில் நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே 3 வடிவ போட்டிகளையும் வெல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த போட்டியில் சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். இதே போல, ஓபன்னாராக எங்களது எதிர்பார்ப்பை சுப்மன் கில் அற்புதமாக பூர்த்தி செய்துள்ளார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here