#INDvsENG பகலிரவு டெஸ்ட் – 145 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்!!

0

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தற்போது இங்கிலாந்து அணி தரப்பில் கிராவிலே மற்றும் சிப்லே களமிறங்கினர்.

இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழலில் சிக்கினர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராவிலே 53 ரன்களை அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக அக்சர் படேல் அசத்தலாக பந்துவீசி 6 மற்றும் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

#MUMvsPDC 152 பந்தில் 227 ரன்கள் விளாசல் – பாண்டிச்சேரியை பந்தாடிய ப்ரித்வி ஷா!!

இந்நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. கடந்த போட்டியை போலவே கில் 11, புஜாரா 0 மற்றும் கேப்டன் கோஹ்லி 27 எடுத்து சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தனர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் அரைசதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டம் முடிவில் களத்தில் ரஹானே மற்றும் ரோஹித் ஆட்டமிழகலாம் இருந்தனர். தற்போது இன்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது. அதில் ரஹானே 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இவரை தொடர்ந்து ரோஹித் 66, ரிஷப் பண்ட் 1 சுந்தர் 0, அக்சர் 0, பும்ராஹ் 1 ரன்னில் வெளியேறினர். தற்போது இந்திய அணி 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 145/10

இஷாந்த் – 10*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here