தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளனர். இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடி உள்ளனர். அதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளனர். தற்போது இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் துவங்க உள்ளது. இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த போட்டி அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இது புதிய மைதானம். மேலும் உலகிலேயே பெரிய மைதானம் என்ற புகழையும் பெற்றுள்ளது. இந்த மைதானம் ஒரே நேரத்தில் சுமார் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் தன்மையை உடையது. மேலும் இந்த மைதானத்தில் 8 செ.மீ வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாத வகையில் நீரை உறிஞ்சி வெளியேற்றும் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிழல் விழாத அளவில் பிரத்யேக எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.
#INDvsENG பகலிரவு டெஸ்ட்டில் வெற்றி பெறுமா இந்திய அணி?? கோஹ்லி கருத்து!!
மேலும் அதற்கு அருகாமையை பிரம்மாண்ட உணவகம், கிரிக்கெட் பயிற்சி அகாடமி, மினி 3டி திரையரங்கம், நீச்சல் குளம் என பல அம்சங்களை பெற்றுள்ளது. தற்போது இந்த மைதானம் புது பொலிவாக காட்சியளிக்கப்படுகிறது. மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் மற்றொரு அணி எது என்பது இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் தெரியவரும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.