பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகமது ஷமி:
இந்திய அணி நாளை முதல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு பிறகு, 2 டெஸ்ட் தொடர்களையும் பங்களாதேஷிற்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கடந்த 1ம் தேதி பங்களாதேஷிற்கு சென்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், இவர் பங்களாதேஷிற்கு எதிரான தொடருக்காக பயிற்சி செய்து மேற்கொண்டு வந்தார்.
இந்த பயிற்சியின் போது, இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதினால், பங்களாதேஷிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இவர் டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என்பதும் கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில், முகமது ஷமி விலகியதை அடுத்த, இளம் வேகப்புயல் உம்ரான் மாலிக் அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.