இந்தியா தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்…, ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டி!!

0
இந்தியா தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்..., ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டி!!
இந்தியா தோல்விக்கு இது மட்டும் தான் காரணம்..., ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டி!!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு இது தான் காரணம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டி நேற்று தாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களுக்குள் சுண்டது. மிக சொற்ப ரன்களை இலக்காக கொண்ட வங்கதேச அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் இந்திய அணியை விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இதுபற்றி ரோஹித் ஷர்மா கூறுகையில், அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று களமிறங்கினோம். ஆனால் எதிர்பாராத விதமாக அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும், பங்களாதேஷிற்கு எதிராக இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

அர்ஜென்டினா, பிரான்ஸை தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறிய பிரபல அணி…, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இதன் மூலம் பவுலிங்கில் நல்ல கம்பேக் கொடுத்துள்ளோம்என தெளிவாக தெரிகிறது. ஆனால், பேட்டிங்கில் இன்னொரு 30 ரன்கள் அதிகம் எடுத்திருந்தாலும் வெற்றி பெற்று இருக்கலாம். குறைவான ஸ்கோர் அடித்தது தான் இந்திய அணி தோல்விக்கு காரணம் என்று ரோஹித் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளில் என்ன தவறு செய்தோம் என்று தெரிந்துகொண்டோம். இதன்படி, இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here