பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்த வேண்டுமானால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த ஒரு வீரர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சுனில் ஜோஷி கூறியுள்ளார்.
IND vs AUS:
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய அணி அடுத்து எதிர்கொள்ள இருக்கும் போட்டியை குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, இந்திய அணி வரும் 9ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்திய அணியை பொறுத்த வரையில், இந்த டெஸ்ட் தொடர் மிக முக்கியமாக பார்க்கப்படுவதால், சீனியர் வீரர்கள் பலர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற இந்த ஒரு வீரர் முக்கியமாக பிளேயிங் லெவனில் தேவை என்று முன்னாள் வீரர் சுனில் ஜோஷி குறிப்பிட்டு கூறியுள்ளார்.
அதாவது, தனித்துவ சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிளேயிங் லெவனில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், ஜடேஜா அணிக்கு திரும்பினாலும், அஸ்வின், அக்சர் படேல் உள்ளிட்டவர்களுடன், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவர், சமீப காலமாக, ரன்களை கட்டுப்படுத்துவதுடன், சரியான நேரத்தில் விக்கெட்டையும் கைப்பற்றி வருகிறார். இதனால், எதிரணியை எளிதில் வீழ்த்த குல்தீப் யாதவ் முக்கியமாக தேவைப்படுவார் என சுனில் ஜோஷி கூறியுள்ளார்.