ஆஸி.,க்கு எதிரான டி20 போட்டி – இந்திய அணிக்கு 187 ரன்கள் இலக்கு!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் (0) ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் வேட் பவுண்டரிகளாக அடித்து ஆடினார். 53 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசிய அவர் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள் அடித்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார். 3 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல் அரைசதம் (54) கடந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக இந்திய அணி 187 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here