இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே ஒரு நாள் உலக கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், லீக் சுற்றின் முடிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறிய நிலையில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அரையிறுதிப் போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் உலக கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இறுதி போட்டியானது, வரும் நவம்பர் 19 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் 1,30,000 லட்சம் ரசிகர்கள் மத்தியில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!