காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள்…, பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து விலகல்??

0
காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள்..., பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து விலகல்??
காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள்..., பார்டர் கவாஸ்கர் டிராபியிலிருந்து விலகல்??

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் மூன்று முன்னணி பந்து வீச்சாளர்கள் விலகி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், இரு அணிகளும் தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரில், நீண்ட மாதங்களுக்கு பிறகு, ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பி உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு அடிமேல் அடி விழுவது போல, முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அதாவது, வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் இருவரும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகுவதாக முன்பு அறிவித்திருந்தனர்.

இந்தியன் சூப்பர் லீக்: அடி பணிந்த ஏடிகே மோகன் பகான்…, அசத்திய பெங்களூரு அணி!!

தற்போது இவர்களை தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது குதிங்காலில் இவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகாததால், முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இவர், 2வது டெஸ்ட் போட்டியிலும் பங்கு பெறுவது கேள்வி குறி தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மண்ணில், சிறப்பாக பந்து வீச கூடிய இந்த 3 வீரர்கள் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here