இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதே போன்று பந்து வீச்சாளர்களில் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதால் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ் போன்ற முக்கிய வீரர்கள் அணியிலிருந்து விலகிவிட்டனர். இதனால் அணியின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மைதானம் குறித்த பிட்ச் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
T20 உலக கோப்பை.., கேப்டனுடன் அதிரடியாக வெளியான வீரர்கள் லிஸ்ட்! மாஸ் காட்டிய நியூசிலாந்து அணி!!
அதாவது மொஹாலி மைதானத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் பிட்சில் அதிகமாக புற்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் புற்கள் அதிகமாக இருந்தால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.