இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகும் விதம் குறித்து தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்:
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி, நாக்பூரில் வரும் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடருக்காக, இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு, டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி வீரர்கள் திரும்பி உள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும், டெஸ்ட் தொடரை பொறுத்த வரையில், விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்துவது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி வீரர்களுக்கு, கிடைக்கிற ரன் அவுட், கேட்ச் வாய்ப்புகளை நழுவ விடாமல் இருப்பதற்கான பீல்டிங் பயிற்சி அதிக அளவில் கொடுக்கப்படுவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, முதல் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளதால், இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.