இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை, இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளனர். தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியை எதிர்நோக்கி இரு அணிகளும் உள்ளனர். இந்த கடைசி போட்டியானது நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
2வது ஒருநாள் போட்டியில், பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி நாளைய போட்டியில் எழுச்சி பெற வேண்டும். இதற்காக, தரமான பிளேயிங் லெவனை இந்திய அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின், டாப் ஆர்டரை பொறுத்தவரையில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி என அதிகபட்சம் மாற்றம் ஏற்படாது. ஆனால், 4 வது வீரராக களமிறங்க இருக்கும் சூர்யகுமாருக்கு நாளைய போட்டி தான் ஒருநாள் தொடருக்கான கடைசி போட்டியாக பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறந்து விளங்கிய வீரர்கள்…, டாப் 5 லிஸ்ட் இதோ!!
இதனால், தன்னிலையில் புரிந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விக்கெட் கீப்பாராக கே எல் ராகுல், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் களமிறங்குவார்கள். இவர்களை தொடர்ந்து, பவுலிங்கில், முகமது ஷமி, சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.