இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது போட்டியில், ஆஸ்திரேலிய அணியை,. இந்திய அணி 269 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது.
IND vs AUS:
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில், கடைசி போட்டியை சேப்பாக்க மைதானத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கே 68 ரன்களை குவித்து இந்திய அணிக்கு பெரும் சவால் விடுத்தனர். ஆனால், இவர்கள் இருவரையும் ஹர்திக் பாண்டியா, டிராவிஸ் ஹெட் (33), மிட்செல் மார்ஷ் (47) ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி அசத்தினார். இதனால், 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
ஹர்திக் பாண்டியா ஒரு புறம் அசத்த, இவருடன் கைகோர்த்து, குல்தீப் யாதவ் தனது தனித்துவமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மார்னஸ் லாபுசாக்னே (28), அலெக்ஸ் கேரி (38), மார்கஸ் ஸ்டோனிஸ் (25), சீன் அபோட் (26), ஆஷ்டன் அகர் (17), மிட்செல் ஸ்டார்க் (10) என நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், 49 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பாக, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.