சென்னையில் நடைபெற இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
IND vs AUS:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளதால், தொடரை வெல்ல போவது யார் என்ற இறுதிப் போட்டியாக பார்க்கப்படுகிறது. மேலும், பல மாதங்களுக்கு பிறகு, முதன் முறையாக சர்வதேச அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடைபெற இருப்பதால், உள்ளூர் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கே கூட்டம் அலை மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதலாக 2 கேலரிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதால், ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்நிலையில், இந்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சென்னையில் உள்ள அரசினர் தோட்டம் முதல், சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவச பேருந்து (சிற்றுந்து) சேவை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையானது நாளை (22) காலை 11 மணி முதல், போட்டி முடியும் நேரம் வரை ரசிகர்ளுக்காக இருக்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சேவையானது முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Press Release 21-03-2023 pic.twitter.com/36znf0wO5l
— Chennai Metro Rail (@cmrlofficial) March 21, 2023