மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான பாலை அரசு கொள்முதல் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்து வருகிறது. பால் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல் மோர், தயிர், ஐஸ்கிரீம், நெய் போன்ற பல்வேறு பால் வகை பொருட்களை மக்களுக்கு மலிவு விலையில் அரசு வழங்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதுபோன்ற பால் உற்பத்தி விற்பனையை தமிழ்நாடு அரசு ஆவின் பெயரில் இயக்குவது போல் புதுச்சேரி அரசு பாண்லே பெயரில் இயக்கி வருகிறது. புதுச்சேரி அரசு நாள் ஒன்றுக்கு 65 லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக மக்கள் தொகை வளர்ச்சியால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(27.12.2022) – முழு விவரம் உள்ளே!!
இதைத்தொடர்ந்து தற்போது பாண்லே நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது. அதாவது பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்துள்ளதால் கொள்முதல் செய்யப்படும் பால் விலையும் லிட்டருக்கு ரூ.3 அதிகரித்து மக்களுக்கு வழங்க புதுச்சேரி அரசு திட்டம் வகுத்துள்ளது. இப்படி அடிக்கடி பால் விற்பனை விலையை அரசு உயர்த்தி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.