நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சி அமைத்து தி.மு.க வின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார் .அதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு :
நடந்து முடிந்த தேத்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தனது கொடியை நாட்டியுள்ளது. மேலும் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்று ஒன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் மக்களின் நம்பிக்கையை பெற்று விளங்குகிறது தி.மு.க.
முதல்வராக பதவியேற்றத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். முதல்வரை தொடர்ந்து அனைத்து மந்திரிகளும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். முதல்வர் மற்றும் மந்திரிகளுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ள தி.மு.க. மக்களுக்கு பயன்படும் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும் எனவும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது..