தமிழகத்தில் நாளை (ஆக.18) குறிப்பிட்ட ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் நாளை (ஆக.18) குறிப்பிட்ட 'இந்த' பகுதிகளில் மின்தடை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நாளை (ஆக.18) குறிப்பிட்ட 'இந்த' பகுதிகளில் மின்தடை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நாளை (ஆக.18) குறிப்பிட்ட ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 18) திருச்செந்தூரில் உடன்குடி தைக்காவூர் பகுதியில் பழுதான மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை திருச்செந்தூரில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரி செய்து பராமரிக்கப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம் போல வழங்கப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது. அந்த வகையில் நாளை திருச்செந்தூரில் உடன்குடி தைக்காவூர் பகுதியில் ஏராளமான மின் கம்பங்கள் பழுதாகியுள்ளது. அதனால் நாளை இதனை சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது. மேலும் இது தொடர்பாக திருச்செந்தூர் மின் வினியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட உடன்குடி தைக்காவூர் பகுதியில் மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. இதனை மாற்றும் பணி நாளை நடைபெற உள்ளதால் இந்த மின் கம்பத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த மின்கம்பத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான சிதம்பரதெரு, நைனாபத்து, சீர்காட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here