நம்மில் பெரும்பாலான பெண்கள் சந்தித்து வரும் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, ஷார்ட் ஹேர் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம் தலைமுடியை பாதுகாக்க, மிகவும் பயனுள்ள டிப்ஸ் தான் இன்றைக்கு நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
- ரோஸ்மேரி இலை – 100 கிராம்
- செக்கு தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
செய்முறை விளக்கம்
முதலில் ஹேர் ஆயில் செய்வதற்கு மருத்துவ குணம் மிக்க ரோஸ்மேரி இலைகளை எடுத்து சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள ரோஸ்மேரி இலைகளை போட்டு ஒரு 15 நிமிடம் குறைவான தீயில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு இந்த எண்ணெயை ஒரு ஜல்லடையில் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். மேலும் இந்த ஹேர் ஆயிலை தினமும் நம் ஹேரில் அப்ளை செய்து வருவதன் மூலம் நம் தலையில் உள்ள இறந்த செல்கள் மீண்டும் வளர்ந்து, நம் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.