தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமான இவர் ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். மேலும் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இவரது முகத்தை வைத்து மார்பிங் செய்த ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இவ்வாறு AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பெண்களை ஆபாசமாக எடிட் செய்து இணையத்தில் வீடியோ வெளியிட்டால், அந்த நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை & ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்., மகப்பேறு உதவித்தொகை குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!