வீட்டுப்பாடம் செய்யாத 15 வயது சிறுமிக்கு சிறை – தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..!

0

அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது சிறுமிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுப்பாடம் செய்யாததால் சிறுமிக்கு சிறை..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க – ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம் அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறியுள்ளார் என்றும் அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.

மீண்டும் ஜார்ஜ் பிலாய்ட்? லண்டனில் கறுப்பின இளைஞரின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய போலீசார்!!

இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கிரேஸ் என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை மிக்சிகன் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்ட மாணவி கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு இப்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here