பிரசாத் ஸ்டூடியோ செல்லும் இளையராஜா – ஒருநாள் அனுமதி வழங்கிய நீதிமன்றம் !!

0

இசையமைப்பாளர் இளையராஜா இன்று ஒருநாள் மட்டும் பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. எனவே அவர் இன்று சென்று தனது பொருட்களை எடுத்து செல்வதற்கும் மற்றும் தியானம் செய்வதற்காகவும் செல்கிறார்.

பிரசாத் ஸ்டூடியோ

தமிழ் சினிமாவிற்காக இசைஞானி இளையராஜா பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார். அவர் தனது இசையமைப்பு வேலைகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே பிரசாத் ஸ்டூடியோ தரப்பினருக்கும் இளையராஜாவிற்கும் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் பிரசாத் ஸ்டூடியோ தரப்பினர் தங்களது இடத்தை காலி செய்யுமாறு கூறி நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இதனை எதிர்த்து இளையராஜா தன்னை அங்கு சென்று தியானம் செய்ய அனுமதிக்குமாறு கூறி வழக்கை துவங்கினர். இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. முதலில் இளையராஜா தரப்பு கருத்தை ஏற்க மறுத்த பிரசாத் ஸ்டுடியோஸ் தற்போது தங்கள் மேல் செலுத்திருக்கும் அணைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜா மற்றும் அவரது உறுப்பினர்கள் உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை ஏற்ற இளையராஜா தற்போது அணைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றுள்ளார். மேலும் அவருக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்டுடியோவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் அவர் தனது பொருட்களை எடுத்து செல்வதற்கும் மேலும் தியானம் மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்கள். இதனை கவனிப்பதற்காக வழக்கறிஞர் ஆணையராக லட்சுமி நாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும் இளையராஜாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here