பிரசாத் ஸ்டூடியோ வழக்கு விவகாரம் – வாபஸ் பெறுவதாக இளையராஜா அறிவிப்பு!!

0

பிரசாத் ஸ்டூடியோ மற்றும் இளையராஜா இரு தரப்பினரிடமும் நடைபெறும் வழக்கில் தற்போது புதிய திருப்பமாக இளையராஜா தன் வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அதே போல் பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவின் உடைமைகளை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இளையராஜாவின் வழக்கு:

தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளரான இளையராஜா ஆரம்பத்தில் இருந்து படங்களுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசை அமைத்துள்ளார். அந்த இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து இளையராஜா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அதே போல் பிரசாத் ஸ்டுடியோவில் விலை உயர்ந்த இசை கருவிகள் இருப்பதாகவும், தனது கோப்புகள், தனது விருதுகள் இருப்பதாகவும் தான் அதனை எடுத்துக் கொள்ள அனுமதி மற்றும் தியானம் செய்ய வேண்டும் என்று இளையராஜா தரப்பில் இருந்து கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு மறுப்பு தெரிவித்த பிரசாத் ஸ்டூடியோ இளையராஜா தனது பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மனுவினை வாபஸ் பெற வேண்டும் என்றும் பொருட்களை எடுத்து கொள்ள அவர் வரக் கூடாது உட்பட சில நிபந்தனைகளை விதித்தது. இதனை பின்பற்றினால் அவர் தனது பொருட்களை எடுத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. கூடுதலாக, நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக இளையராஜா உயர்நீதிமன்றத்தில் பிரதான மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி!!

இதனை அடுத்து தற்போது வழக்கில் புதிய திருப்பமாக இளையராஜா தான் அந்த வழக்கினை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதே போல் இனி பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் இருந்து கூறப்பட்டதை போல் நிபந்தனைகளை ஏற்று உயர்நீதிமன்றத்தில் பிரதான மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரசாத் ஸ்டூடியோ சார்பில் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here