கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று ஐஸ்வர்யா திருமணம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கின்றது. இன்று ஸ்பெஷல் எபிஸோடாக இரவு 7 மணி முதல் 9:30 மணி வரை சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதயத்தை திருடாதே” சீரியல்
இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவாவின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த கொண்டாட்டத்தில் “சில்லுனு ஒரு காதல்” சீரியலின் கதாநாயகன் சூர்யா மற்றும் கதாநாயகி கயல் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதே போல் இன்று பாட்டு, டான்ஸ் என்று எபிஸோடில் கோலாகலதிற்கு பஞ்சமே இருக்காது என்று தான் கூற வேண்டும். அனைவரும் ஐஸ்வர்யாவின் கல்யாணத்திற்க்கு வருகின்றனர்.
‘இனி பொது இடங்களில் மாஸ்க் அணிய தேவையில்லை’ – அரசு அதிரடி!!
சிவா, சஹானா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக விருந்தினர்களை வரவேற்றனர். இப்படியாக இருக்க, சிவாவின் அம்மா பவானி மற்றும் கோதண்டம் இருவரும் தாட்சயினி என்ன செய்ய போகிறார் என்பது குறித்து மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர். தாட்சயினிக்கு போன் செய்து அது குறித்து கேட்கின்றனர். தாட்சயினியோ திருமணம் குறித்து கூற போவதில்லை என்று கூறி விடுகிறார். இதனால் இருவருக்கும் மிகவும் பதட்டமாகி விடுகிறது. ஐஸ்வர்யா பியூட்டி பார்லருக்கு சஹானாவுடன் செல்கிறார். அப்போது சேது அங்கு வந்து ஐஸ்வர்யாவை மிரட்டி விட்டு செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பயந்து போகும் ஐஸ்வர்யா, இது குறித்து சிவாவிடம் கூறினால் மிக பெரிய பிரச்சனை வந்து விடும் என்று எண்ணி யாரிடமும் அது குறித்து கூறாமல் விட்டு விடுகிறார். பின், இரவில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அப்போது “சில்லுனு ஒரு காதல்” சீரியல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி வந்து சந்தோசமாக ஆடுகின்றனர். இப்படியாக இருக்க, இதனை பார்த்து சேது கொந்தளிக்கிறார். அவரை சமாதானம் செய்யும் தாட்சயினி ஐஸ்வர்யாவின் திருமணம் உன்னுடன் தான் என்று தெரிவிக்கிறார். இதனை அடுத்து, ஐஸ்வர்யாவின் திருமணம் சிவா நிச்சயித்த மாப்பிள்ளையுடன் நடைபெறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.