இட்லியை பார்த்தாலே வெறுப்பா இருக்கா?? அப்போ மீதமான இட்லியில் இப்படி செஞ்சு பாருங்க!!

0

இட்லி என்றாலே காலை உணவை தவிர்க்க கூடியவர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு கூட இட்லி என்றால் சலிப்பு தட்டி விடும். அப்படி பட்ட இட்லியை வைத்து சுவையான புது டிஷ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி – 5

தக்காளி – 2

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – தேவைக்கேற்ப

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் இட்லியை சம அளவில் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது புளி சேர்த்து கொள்ளவும். அப்படி சேர்த்து அந்த இட்லியை பொரிந்து எடுத்தால் இட்லியில் எண்ணெய் இழுக்காது.

இப்பொழுது மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இப்பொழுது அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். இப்பொழுது இட்லியை அதில் சேர்த்து வதக்கி எடுத்தால் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here