கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இப்படி இருக்கும் நிலையில் மக்களால் ஏதும் வெளியே சென்று வாங்க முடியவில்லை மக்களின் மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியவில்லை ,இதை பார்த்த வோடபோன் ஐடியா நிறுவனம் #RechargeforGood எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாத குடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.
வோடபோன் ஐடியா புது திட்டம்:
வோடபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு உத்தரவால், மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால்,இணையதளம் வாயிலாக ரீசார்ஜ் செய்ய முடியாமல், வோடபோன் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது ‘ரீசார்ஜ் பார் குட்’ என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேஷுபாக் ஆப்பர்
வோடபோன் ஐடியா மொபைல் நிறுவன வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யமுடியாத, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, ‘மை வோடபோன் ஆப் அல்லது மை ஐடியா ஆப்’ டவுன்லோட் செய்து வாயிலாக, ரீசார்ஜ் செய்து கொடுத்தால், அத்தொகைக்கு ஏத்தவாறு கேஷ்பேக் சலுகை தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும்.இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு சலுகை, ஏப்., 30 வரை அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |