கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலான “இதயத்தை திருடாதே” சீரியலில் தற்போது பல ட்விஸ்டுகள் இருந்து வருகின்றது. சஹானா இறுதி போட்டிக்கு செல்ல மறுக்கிறார். இதனால் மனம் உடைந்து போன சிவா தான் ஆடவில்லை என்று கூறிவிடுகிறார்.
இதயத்தை திருடாதே
ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் தான் நடிகர் மற்றும் நடிகைக்கு கெமிஸ்ட்ரி இருந்து வந்தது. ஆனால், தற்போது சீரியலில் கூட கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு ரொமான்ஸ் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. குடும்பத்தினர் பார்க்கும் அளவில் அந்த காதல் காட்சிகள் அமைத்து விடுவதால் மக்களும் அதனை விரும்பி பார்த்து வருகின்றனர். அப்படி மக்களுக்கு மிகவும் சீரியல் தான், “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது சிவா டான்ஸ் ஆட இறுதி போட்டிக்கு செல்கிறார்.
பொள்ளாச்சி சம்பவம் மோடிக்கு தெரியாதா?? வறுத்தெடுக்கும் ஸ்டாலின், கனிமொழி!!
ஆனால், அனைவரின் வார்த்தைகளால் குழப்பத்தில் இருக்கும் சஹானா தன்னால் வர முடியாது என்று கூறி விடுகிறார். ஆனால், சிவா விடாமல் கெஞ்சவும், தான் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வருவதாக கூறி விடுகிறார். இதனால் ஓரளவிற்கு சமாதானம் ஆகும் சிவா முன்னாடியே சென்று விடுகிறார். நீண்ட நேரம் ஆகியும் சஹானா வராததை பார்த்து நொந்து போகும் சிவாவிற்கு திடீரென சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் வந்து விடுகிறார் நம் சிவாவின் சஹானா.
இறுதி போட்டி
அதே போல் அவருடன் சஹானா டான்ஸ் ஆடுவார் என்று மீரா கூறுகிறார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். சஹானா மற்றும் சிவா இருவரும் நடனமாடுகின்றனர். இருவரின் நடனம் அனைவருக்கும் பிடித்து போய் விடுகிறது. இருவரும் முதல் பரிசினை தட்டி சென்று விடுகின்றனர். பின், இருவரும் மீராவிற்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கூடுதலாக, இன்று இன்ஸ்பெக்டர் வெற்றி சிவாவை எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்று அவரது நண்பரான பரட்டையிடம் கேட்கிறார். அதே போல் பரட்டை சிவாவிற்கு எதிராக சாட்சி கூறவில்லை என்றால் அவரது தந்தையை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதற்கு பரட்டை எப்படி ரியாக்ட் செய்ய போகிறார் என்று தான் தெரியவில்லை.