கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியல் தான் தற்போது டாப் ரேட்டிங்கில் போய் கொண்டு இருக்கின்றது. காரணம், அந்த சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்கள் வருகின்றது என்று கூட சொல்லலாம்.
இதயத்தை திருடாதே
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் தற்போது பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. அதில் உச்சகட்டமாக இன்று சஹானாவை பவானி விழுந்து விழுந்து தாங்குகிறார். புது வீட்டிற்கு அனைவரும் செல்கின்றனர். அதே போல் மிகவும் கோலாகலமாக கிரகப்பிரவேசம் நடத்துகின்றனர்.
வனிதாவால் மகன் ஸ்ரீஹரிக்கு வந்த நிலைமை – பாவம் என்ன பாடு படுறாரு பாருங்களே!!
இதனை அடுத்து சஹானா வீட்டில் இருந்து அவரது அப்பா மட்டும் வருகிறார். பவானி அவரை முன்பு போல் இல்லாமல் மிகவும் அன்போடு நடத்துகிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஆச்சரியம் அடைகிறது. அதே போல் மிகவும் சந்தோஷமும் அடைகின்றனர். இப்படியாக இருக்க, ஐஸ்வர்யா தனது அண்ணன் மற்றும் அண்ணிக்காக பரிசுகளை வழங்குகிறார்.
ஐஸ்வர்யா கொடுத்த பரிசு
சிவாவின் அனைத்து புகைப்படங்களையும் ஃபிரேம் போட்டு பரிசாக வழங்குகிறார். கடைசியாக, சிவா மற்றும் சஹானா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை வழங்குகிறார். இதனால் இருவருமே மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். அதன் பின் சிவாவின் நண்பன் பரட்டை அவரிடம் இன்ஸ்பெக்டர் வெற்றி தன்னிடம் கூறியதை குறித்து தெரிவிக்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் சிவாவிடம் சஹானாவின் முன்னாள் காதலனான பார்த்தசாரதி குறித்து கேட்கிறார். சிவா அது குறித்து மட்டும் இன்னும் கூறவில்லை. இதனால் கண்டிப்பாக பார்த்தசாரதி கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று தான் தெரிகிறது.