கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவாவின் அம்மா பவானி சஹானாவிற்கு என்று தனது மாமியார் அளித்த விலையுர்ந்த பட்டு புடவையை கொடுத்து விட்டு சஹானா சென்றதும் மிகவும் வருத்தப்படுகிறார்.
இதயத்தை திருடாதே
தனியார் தொலைக்காட்சியான கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான், “இதயத்தை திருடாதே”. இந்த சீரியலில் தற்போது மிகவும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. சிவாவின் அம்மா குடும்பத்தினர் அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறார். குறிப்பாக, சஹானாவிடம் மிகவும் அன்பு காட்டி வருகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் சந்தேகம் வருகின்றது.
கும்கி பட லட்சுமி மேனனா இது?? வைரலாகும் குழந்தை புகைப்படம்!!
பவானி சஹானாவிற்கு தனது மாமியார் தனக்கு கொடுத்த விலையுர்ந்த காஞ்சிபுர பட்டினை கொடுக்கிறார். முதலில், சஹானா மறுத்தாலும் பின்பு மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொள்கிறார். ஆனால், இப்படி சஹானா முன்பாக அன்பாக கொடுத்த பவானி சஹானா சென்றதும் அவரை திட்டி தீர்க்கிறார். தனது மாமியார் கொடுத்த உயர்ந்த ரக பட்டினை இவளுக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்தவும் செய்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக போய் கொண்டு இருக்க சிவா ஐஸ்வர்யாவின் திருமணத்திற்காக என்று திருமண மஹாலை புக் செய்து விட்டு வருகிறார். அதே போல் இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை காணாமல் போனதை அடுத்து அந்த குழந்தையினை சிவா மீட்டு வெற்றியின் மனைவியிடம் ஒப்படைக்கிறார். ஆனால், வெற்றி வீட்டிற்கு வரும் முன்பாகவே சிவா சென்று விடுகிறார்.
இதனால் இருவரும் சந்திக்காமல் சென்று விடுகின்றனர். இன்ஸ்பெக்டர் வெற்றி சஹானாவின் அண்ணனாக இளங்கோவிடம் சென்று சிவாவை ஜெயிலுக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர். பவானியை சந்தேகப்படும் நீலகண்டன் அவருக்கு ஒரு சோதனை வைக்கிறார். அதில் இருந்து பவானி உண்மையாக மாறி விட்டாரா? அல்லது நடிக்கிறாரா?? என்று யோசனை செய்கிறார்.