இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் பவானி சஹானாவை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதனை அடுத்து இன்று சஹானா மன்னிப்பு கேட்பாரா?? என்பதை இந்த பதிவில் காணலாம்.
“இதயத்தை திருடாதே” சீரியல்
“இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சஹானாவை பவானி இன்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். சஹானாவும் சரி என்று கூறி அவரது வீட்டிற்கு வருகிறார். ஆனால், அவருக்கு பழைய நினைவுகள் வந்து விடுகிறது. இதனை அடுத்து மன்னிப்பு கேட்க மறுக்கிறார். பவானி சஹானாவை மன்னிப்பு கேட்க சொல்லி வலியுறுத்துகிறார். அப்போது சிவாவின் அப்பா மற்றும் சஹானாவின் அப்பா இருவரும் வந்து சிவாவிற்கு ஜாமின் கிடைத்து விட்டது என்று கூறி விடுகின்றனர்.
சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!
இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். வீட்டிற்கு வந்து விடும் சிவா ஐஸ்வர்யாவை சமாதானம் செய்கிறார். இப்படியாக இருக்க சிவா மற்றும் சஹானா இருவரும் தனிமையில் பேசும்போது சிவா எதற்காக தாட்சயினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு சஹானா சிவாவிற்காக யார் காலிலும் தான் தயாராக இருப்பதாக கூறுகிறார். பின், இருவரும் கட்டியணைத்து கொள்கின்றனர். இருவருக்குமான காதல் மற்றும் புரிதல் அதிகமாகிறது.
இதனை அடுத்து அனைவரும் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கான வேலைகளில் இறங்குகின்றனர். அப்போது பவானிக்கு தாட்சணியிடம் இருந்து போன் வருகின்றது. அப்போது அவர் அதனை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார். இதனால் அவரை நீலகண்டன் நன்றாக திட்டி விடுகிடுகிறார். இப்படியாக இருக்க, சிவா தாட்சயினிக்கு ஒரு பத்திரிகையை வைத்து விடுவோம் என்று கூறுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின், பவானி தாட்சயினியை பார்க்க செல்கிறார். அப்போது அங்கு சஹானா மற்றும் சிவா இருவரும் தாட்சயினியை பார்க்க வருகின்றனர். அப்போது பவானி உள்ளே சென்று ஒளிந்து கொள்கிறார். சிவா மற்றும் சஹானா இருவரும் தாட்சயினிக்கு பத்திரிகை வைக்கின்றனர். அதனை தான் வாங்காமல் ரத்தனத்திடம் வாங்கி உள்ளே வைக்க சொல்கிறார். சிவா மற்றும் சஹானா இருவரும் பவானியை பார்ப்பார்களா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.