கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சேது சிவாவிடம் அடி வாங்கியதை பார்த்து தாட்சயினி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். தாட்சயினி மற்றும் சிவா இருவருக்கும் சண்டை வருகின்றது.
இதயத்தை திருடாதே தொடர்
இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் சேதுவை சிவா அடித்த விஷயம் தாட்சயினிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் அவர் உச்சகட்ட கோபம் அடைந்து விடுகிறார். அதே போல் இந்த விஷயத்தினை சஹானாவிடம் சிவா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கூறுகின்றனர். இதனால் சஹானாவும் கோபம் அடைகிறார். இப்படியான சூழலில் தாட்சயினி சிவா வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார்.
என்னது 100வது வெற்றியா?? வேற லெவல் போங்க! கொல்கத்தா அணியை பாராட்டி ஷாருகான் ட்வீட்!!
முதலில், சஹானா சென்று சமரசம் பேசுகிறார். ஆனால், தாட்சயினி அதிகமாக பேசவும் சிவாவிற்கு மிகவும் கோபம் வந்து விடுகிறது. பின், இருவரும் சண்டை போடுகின்றனர். பின், சேது தனது வீட்டில் மிகவும் கோபத்துடன் இருக்கிறார். ஐஸ்வர்யாவின் புகைப்படத்தினை எடுத்து உடைக்கிறார். அதே போல் தனக்கு ஐஸ்வர்யா தேவையில்லை என்றும் சூளுரைக்கிறார். அவரை தாட்சயினி சமாதானம் செய்கிறார். இப்படியாக இருக்க, சிவா வீட்டில் அனைவரும் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர்.
அதே போல் ஐஸ்வர்யாவின் திருமணத்தை நினைத்தும் வருந்துகின்றனர். பின், அடுத்த நாள் அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு முகூர்த்த பட்டு எடுக்க கிளம்புகின்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் வெற்றி வந்து சிவாவை கைது செய்ய இருப்பதாக கூறுகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அனைவரும் இன்ஸ்பெக்டரிடம் சிவாவை அழைத்து செல்ல வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், இன்ஸ்பெக்டர் வெற்றி சிவாவை அழைத்து சென்று விடுகிறார். இதனை அடுத்து சஹானா சிவாவை ஜாமினில் எடுக்க செல்கிறார். தான் மட்டும் தனியாக சென்று வருவதாகவும் தெரிவித்து விடுகிறார்.