காணாமல் போகும் இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை, பரிதவிப்பில் குடும்பம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் தற்போது இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை காணாமல் போய் விடுகிறது. அந்த குழந்தை சிவாவின் கையில் கிடைத்து விடுகிறது.

இதயத்தை திருடாதே

தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது சிவா மற்றும் சஹானாவிற்கான காதல் காட்சிகள் இடம் பெற்று வருகின்றது. கூடுதலாக, தற்போது சிவாவின் அம்மா பவானி ரொம்பவே வித்தியாசமாக நடந்து கொள்கிறார். இதனால் குடும்பத்தினர் சந்தோசம் அடைந்தாலும் அனைவருக்கும் சிறு சந்தேகம் வருகின்றது.

பாக்கிலட்சுமி சீரியல் நடிகர் எழில் பற்றிய தெரியாத விஷயங்கள் – ஷாக்கான ரசிகர்கள்!!

அவர் எதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் இவ்வாறாக நடந்து கொள்கிறார் என்று அனைவரும் நம்புகின்றனர். பவானி நடு இரவில் யாருடனோ பேசுகிறார். இது குறித்து ஐஸ்வர்யா கேட்கும் போது அதனை ஏதேதோ சொல்லி மழுப்பி விடுகிறார். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றியின் குழந்தை காணாமல் போய் விடுகிறது. இதனால் வெற்றி குடும்பத்தினர் மிகவும் பரிதவித்து போய் விடுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், அதிர்ஷ்டவசமாக குழந்தை சிவாவிடம் வந்து சேர்ந்து விடுகிறது. இதனை அடுத்து சிவா வெற்றியின் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைக்கிறார். வெற்றியின் மனைவி சிவாவிற்கு நன்றி கூறி விட்டு வெற்றி வரும் வரை காத்திருக்க சொல்கிறார். இதனை அடுத்து சிவா காத்திருந்து வெற்றியை பார்ப்பாரா?? வெற்றி சிவாவை புரிந்து கொள்வாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here