ஐஸ்வர்யா திருமணத்தில் இருக்கும் பிரச்சனை?? அதிர்ச்சியில் சிவாவின் அப்பா! பல ட்விஸ்டுகளுடன் “இதயத்தை திருடாதே”!!

0

இதயத்தை திருடாதே சீரியலில் இன்று ஐஸ்வர்யா திருமணம் குறித்து கேட்பதற்காக சிவா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் குலசாமி கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு இருக்கும் பூசாரி சிவா அப்பா நீலகண்டனை அழைத்து திருமணத்தில் சில பிரச்சனைகள் வரலாம் என்று கூறி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துகிறார்.

இதயத்தை திருடாதே சீரியல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று ஐஸ்வர்யா திருமணம் குறித்து கேட்க வேண்டும் என்று குலசாமி கோவிலுக்கு செல்கின்றனர். பூசாரி சஹானா குறித்து விசாரிக்கிறார். அதே போல் பூஜைக்கு தேவையானவற்றை செய்ய அவர் கிளம்பி விடுகிறார். பின், குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசி சிரிக்கின்றனர். அப்போது பவானிக்கு தாட்சயினியிடம் இருந்து போன் வருகின்றது. இதனை அடுத்து அவர் ஒரு அடியாளை அனுப்பி சேது மற்றும் ஐஸ்வர்யா பெயர் இருக்கும் பத்திரிகையினை அனுப்பிவிடுகிறார்.

முக்கிய பிரபலத்துடன் நடித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – காட்டுத்தீயாய் பரவும் செய்தி!!

அதனை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இப்படியாக இருக்க, ஐஸ்வர்யா நடந்து செல்லும் போது காலில் அடிபட்டு விடுகின்றது. இதனால் அனைவரும் பதட்டமடைகின்றனர். அந்த சூழலை பயன்படுத்தி பவானி பத்திரிகையினை மாற்றி விடுகிறார். அதன் பின்பாக, பூஜை நடக்கின்றது. பூசாரி பூஜையை முடித்து விட்டு தனியாக நீலகண்டனிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். அவர் தனியாக அழைத்து ஐஸ்வர்யா திருமணத்தில் பல பிரச்சனைகள் வரும் என்று தெரிவிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நீலகண்டன் மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இதனை கேட்டதற்கு பின்பாக தனது மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி விட்டு வருகிறார். இப்படியாக வீட்டிற்கு வந்து விடுகின்றனர். சிவாவின் சித்தி பத்திரிகையினை எடுத்து அலமாரியில் வைக்கிறார். அதனை அவரது கணவர் கோதண்டம் பார்த்து விட்டு மறைத்து விடுகிறார். இதனை அடுத்து அதனை சிவா எடுத்து விடுகிறார். இப்படியாக இன்று ட்விஸ்டுடன் எபிசொட் முடிந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here