இறுதி போட்டிக்கு வர மறுக்கும் சஹானா?? – விறுவிறுப்பான கதைக்களத்துடன் “இதயத்தை திருடாதே”!!

0

அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது கதாநாயகி சஹானாவிற்கு சிவா மீராவுடன் நெருக்கமாக இருப்பது கோபத்தை வரவழைக்கிறது.

இதயத்தை திருடாதே

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் தற்போது சிவா தனது டான்ஸ் பார்ட்னர் மீராவுடன் சகஜமாக பேசி பழக ஆரம்பித்து விட்டார். அதே போல் டான்ஸ் ஆடுவதிலும் கலக்குகிறார். இது ஒரு பக்கம் சஹானாவிற்கு மகிழ்ச்சியினை கொடுத்தாலும், இன்னொரு பக்கம் அவருக்கு சிவா மீராவுடன் இருப்பது கோபத்தை வரவழைக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் சிவா மேல் எரிந்து எரிந்து விழுகிறார். அதே போல் டான்ஸ் மாஸ்டர் சஹானாவை இனி இங்கே வர வேண்டாம் என்று வேறு கூறி விடுகிறார். இது தெரியாத சிவா சஹானாவை வர சொல்கிறார். ஆனால், சஹானாவோ வேலைகளை பார்க்க வேண்டும் என்று கூறி மறுத்து விடுகிறார். சஹானா சிவாவின் நடவடிக்கை குறித்து தனது அம்மாவிடம் கூறுகிறார்.

இறுதி போட்டிக்கு வருவாரா??

அவரது அம்மாவும் சஹானாவை நன்றாக குழப்பி விடுகிறார். அதே போல் தான் டான்ஸ் போட்டியிலும் வர முடியாது என்று சஹானா திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் நொந்து போகும் சிவா அவரை எப்படியாவது போட்டிக்கு வர வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து கெஞ்சுகிறார். ஆனால், சஹானா திட்டவட்டமாக மறுத்து விடுகிறார். மேலும், தான் பின்னாடியே வருகிறேன் என்றும் கூறி விடுகிறார். ஓரளவுக்கு சமாதானம் ஆகும் சிவா போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிவாவின் குடும்பத்தினர் அனைவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றனர். ஆனால், சஹானா மட்டும் வரவில்லை. இதனால் சிவாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகின்றது. அனைவரும் சிவாவை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், சிவா சஹானா வந்தால் மட்டுமே ஆடுவேன் என்று திட்டமிட்டு கூறிவிடுகிறார். சஹானா இறுதி போட்டிக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here