சிவா மற்றும் சஹானாவிற்காக பிச்சை எடுக்கும் பவானி – பாசபோராட்டங்களுடன் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவா மற்றும் சஹானா இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரது நண்பர் ஒருவர் ஊரில் இருந்து வருகிறார். அவர் வந்து இன்ஸ்பெக்டர் வெற்றியை ஒரு வழி செய்து விடுகிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவா மற்றும் சஹானா இருவரையும் காணாமல் வீட்டில் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றனர். இருவரையும் காப்பாற்ற என்று சிவாவின் நண்பர் வேலு என்று ஒருவர் வருகிறார். அவரை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியாது என்று கூறுகின்றனர். அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் சிவா மற்றும் சஹானா இருவர் பற்றியும் கேட்கிறார்.

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

பின், வீட்டில் உள்ளவர்கள் சிவா மற்றும் சஹானா தொலைந்ததை பற்றி கூறுகின்றனர். இதனை கேட்கும் அவர் இருவரையும் காப்பாற்றி அழைத்து வருவது தனது பொறுப்பு என்று கூறி விட்டு செல்கிறார். பின், பவானி சிவா மற்றும் சஹானா இருவரும் கிடைக்க வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்து பூஜை செய்கிறார். வேண்டுதல் செய்யும் போது அவருக்கு மயக்கம் மற்றும் தலை சுற்றல் வந்து விடுகிறார். இதனால் வேண்டுதலை நினைவேற்ற வேண்டாம் என்று வீட்டினர் கூறுகின்றனர். பின், பவானி சிவா மற்றும் சஹானா இருவரும் நல்லபடியாக கிடைக்க வேண்டும் என்று அவர் மடிபிச்சை எடுக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், இன்ஸ்பெக்டர் வெற்றியை காண வேலு செல்கிறார். வெற்றி அவரை பார்த்து டென்ஷன் ஆகி விட்டு, யார் என்று கேட்கிறார். தான் ஒரு ஸ்பெஷல் போலீஸ் என்று கூறியதும், அதிர்ச்சி அடையும் இன்ஸ்பெக்டர் வெற்றி அவரிடம் சிவா மற்றும் சஹானா இருவரும் காணாமல் போன விவகாரத்தை பற்றி கூறுகிறார். கடைசியாக, வேலு தான் ஸ்பெஷல் போலீஸ் கிடையாது என்றும் தான் தான் “மதுர” வேலு என்று கூறுகிறார். இவர் மிக பெரிய ரவுடி என்று அறிந்து கொள்ளும் வெற்றி டென்ஷன் ஆகுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here